Sunday 29 April 2012

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் -9




அன்று மாலை வீட்டிற்கு சென்ற கார்த்தி தன் அம்மாவிடம் சீக்கிரமே தன் கல்யாணம் பற்றி முடிவெடுக்க வேண்டும் என்று கூற
, அவளோ இப்போது தான் காதலை பற்றியே அறிந்தோம். அதற்குள் கல்யாணம் என்ற அடுத்த குண்டை போடுகிறானே. அவரை எப்படி சமாளிப்பது?

இப்போ என்ன டா அவசரம்? உங்க அப்பா என்ன சொல்லுவாங்களோ?. சரி டா. பேசலாம்”.

சரி மா. அதுக்கு முன்னாடி  கீர்த்தனாவையும், அவங்க அம்மாவையும் ஒரு முறை வீட்டுக்கு கூட்டிட்டு வரவா.

தாராளமா கூட்டிட்டு வா.

அலுவலகம் சென்ற கார்த்தி கீர்த்தனாவிடம் தங்கள் கல்யாண விஷயமாக பேச தந்தை இறந்து சில தினங்களே ஆன நிலையில் முதலில் தயங்கினாள். பின் இந்த பிரச்சனையை பற்றி எடுத்துக் கூறியதும் புரிந்துக் கொண்டாள். ஆனால் அம்மாவிடம் இந்த நிலைமையில் கல்யாணத்தை பற்றி எப்படி பேசுவது என தயங்கினாள். அம்மாவும், நீயும் ஒரு முறை வீட்டிற்கு வாங்க. என் அப்பா, அம்மாவை உங்க அம்மாகிட்ட பேச சொல்றேன்”.

சரி கார்த்தி. நான் அம்மாவை கூட்டிக்கிட்டு இந்த சன்டே வீட்டிற்கு வரேன்”.

இருவரும் இருந்த சகஜ நிலையை பார்த்த ஜெனிக்கு ஆச்சரியம். ஜெனியின் மனதில் அவள் வீட்டில் ஏதும் பிரச்சனை ஏற்படலையா? நாம போட்ட லெட்டர் சரியான அட்ரஸ்க்கு போகலையா? இல்லை. கீர்த்தனா கையிலே கிடைச்சிருச்சா? எப்படி தெரிஞ்சுகிறது? ஆனாலும் பிரச்சனை ஏதும் நடக்கலை போல!!! வேற ஏதாச்சும் பண்ணனும். பேசாம கீர்த்தனா வீட்டுக்கு போயி அவங்க அம்மாவை பாத்து எல்லாத்தையும் சொல்லிடலாமா? வேணாம். நேர்ல போனா ரிஸ்க். கார்த்திக்கு தெரிஞ்சா என்னை சும்மா விட மாட்டான். கீர்த்தனா வீட்டு நம்பர் தெரிஞ்சா கால் பண்ணியே பேசிடலாம்.நம்பர் தானே தெரிஞ்சுக்குவோம்.

ஹாய் கீர்த்தி. சாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ். ஒரு கால் பண்ணனும். உன் ஃபோன் கொடுக்குறீங்களா?”

ம்ம். இந்தாங்க.

ஜெனி மனக்குரல். ச்ச. ஹோம் னு நம்பர் இல்லை. சரி அம்மானு சர்ச் பண்ணலாம். எஸ்‌எஸ். இருக்கு. கார்த்தி உன் லவ்வை பிரிக்காம விட மாட்டேன். என்னையா இன்சல்ட் பண்ற!!!!!!!!!

மாலை வீட்டிற்கு சென்ற கீர்த்திக்கு காஃபி கொடுத்தாள் அவள் அம்மா. காஃபி அருந்திக் கொண்டே அவள் அம்மாவிடம் மெதுவாக விஷயத்தை ஆரம்பித்தாள்.

அம்மா. நாம இந்த சன்டே கார்த்தி வீட்டுக்கு போய்ட்டு வரலாமா? கார்த்தி வர சொல்றான்.

நீ மட்டும் போய்ட்டு வா மா. நான் எதுக்கு?”

உனக்கு ஒரு சேஞ்ச் வேணும். சென்னை வந்ததுல இருந்து வீட்லே இருக்கணு தான் உன்னைய கூட்டிட்டு வர சொன்னான். நீ வரலைனா நானும் போகலை மா”.

சரி மா. வரேன். போகலாம். நான் போய் டின்னர் ரெடி பண்றேன் மா”.

சற்று நேரத்தில் அவள் அம்மாவின் அலைபேசி ஓசை கேட்க அவள் அம்மாவை அழைத்தாள் கீர்த்தனா.

நான் தான் வேலையா இருக்கேன்ல கீர்த்தி. நீயே எடுத்து பேசு மா. யாருனு கேளு

ஹலோ. கீர்த்தனா அம்மா வா. நான் சொல்றதை கேளுங்க. உங்க பொண்ணு கீர்த்தனா, கார்த்தி னு ஒரு பையனா லவ் பண்ற. அந்த பையன் ரொம்ப மோசமானவன். ஏற்கனவே 2,3 பொண்ணுங்களை ஏமாத்திருக்கான். இப்போ உங்க பொண்ணை ஏமாத்த பாக்குறான். உங்க பொண்ணு வாழ்க்கையை காப்பத்துங்க. ஹலோ. லைன் ல இருக்கீங்களா?”
அத்துடன் கீர்த்தனா இணைப்பை துண்டித்தாள். யாரு இந்த வேலையை பண்றா? என தனக்குள்ளேயே யோசித்தாள்.

கீர்த்தனா அம்மா எதுவுமே பேசலையே. பொண்ணு வாழ்க்கையை நினைச்சு டென்ஷன் ஆகிருப்பாங்களோ. ஆகட்டும். ஆகட்டும். நாம நினைச்சது நடந்தா நல்லது தான்ஜெனி தனக்குள்ளே சந்தோசமானாள்.


மறுநாள் அலுவலகத்தில் தனக்கு வந்த போனில் கூறியவற்றை நினைத்து கலவரமாய் இருந்தாள் கீர்த்தனா. கீர்த்தனாவின் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருந்த ஜெனி மிகவும் சந்தோஷம் அடைந்தாள். கார்த்தி கூறியபடி திருமணத்தை விரைவில் முடித்து விட வேண்டும் என தனக்குள் முடிவு செய்தாள் கீர்த்தனா. மதிய உணவு இடைவேளையின் போது கார்த்தியை சந்தித்து விஷயத்தை கூறினாள்.

உங்க அம்மா ஃபோன் நம்பர் இப்போ சென்னைக்கு வந்த பின்னாடி தான் மாத்துன. கண்டிப்பா இதை நம்ம சுத்தி இருக்க யாரோ தான் பண்ணுறாங்க. யாருக்கெல்லாம் அம்மாவோட புது நம்பர் தெரியும் கீர்த்தி?”.

உனக்கும், எனக்கும் மட்டும் தான் தெரியும் கார்த்தி”.

அப்புறம் எப்பிடி கீர்த்தி ஃபோன் வரும்? நல்லா யோசிச்சு சொல்லு கீர்த்தி”.

யாருக்கும் கொடுக்கலை டா. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு”.

உன் ஃபோனை உன்னை தவிர வேற யாராவது யூஸ் பண்ணுவாங்களா?”

நேத்து தான் ஜெனி வாங்குனா. அதுக்கு முன்னாடி ஒரு தடவை அவளே தான் வாங்கிருக்கா. வேற யாருக்கும் கொடுத்தது இல்லை கார்த்தி.

சந்தேகமே இல்லை கீர்த்தி. கண்டிப்பா இதெல்லாம் அவ தான் பண்றா கீர்த்தி. அவகிட்ட அளவா வச்சுக்கோனு சொன்னேன். நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கலாம் கீர்த்தி. சரி விடு. இன்னைக்கே அவளை சந்திச்சு பேசிடுறேன். இதுக்கு மேல அவ நம்ம விஷயத்துல தலை இட கூடாது.

சரி கார்த்தி. நானும் வரேன். அவகிட்ட பேசலாம்.

மாலை அலுவலகம் அருகில் இருக்கும் பூங்காவில் ஜெனி, கீர்த்தி, கார்த்தி மூவரும் சந்தித்து பேசினர்.

கார்த்தி: எதுக்காக இப்பிடி பண்ற ஜெனி?”

ஜெனி: நான் என்ன பன்னேன்? எதை பத்தி கேக்குற?”

கார்த்தி: சும்மா நடிக்காத டி. எதுக்கு நீ கீர்த்தி வீட்டுக்கு லெட்டர் போட்ட? அவங்க அம்மாவுக்கு கால் பண்ணின?”

ஜெனி: நான் எதுக்கு உன்னை பத்தி தப்பு தப்பா அவங்க அம்மாகிட்ட சொல்ல போறேன்”.

கார்த்தி: நிறுத்து உன் நாடகத்தை. எதுக்கு கால் பண்ணுனனு தான கேட்டேன். நீயா தான இப்போ உளறின. உனக்கும் எனக்கும் சரி வரலைனு தான உன்னை விட்டு விலகுனேன். என்னை நிம்மதியா இருக்க விட மாட்டியா?”

கீர்த்தி: கார்த்தி அமைதியா இரு. நான் பேசிக்கிறேன். ஜெனி, கார்த்தி உன்னை பொருத்தவரை எப்பிடினு எனக்கு தெரியாது. ஆனா எனக்கு கார்த்தி இல்லாத வாழ்க்கை இல்லை. ஏற்கனவே என் வீட்ல நிறைய ப்ராப்ளம் இருக்கு. அப்பா இறந்து ஒரு மாசம் தான் ஆகுது. அம்மா அதை விட்டே இன்னும் வெளிய வரலை. இப்போ என்னையும், கார்த்தியும் பத்தி தப்பு தப்பா சொன்னா அம்மாவால தாங்க முடியாது. கார்த்தி லாஸ்ட் மன்த் ஹையர் ஸ்டடீஸ் கு அமெரிக்கா போறதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு இருந்தப்பா தான் அப்பா இறந்தாங்க. அதோட பிளான் ஏ விட்டுட்டான். எனக்காக லைஃப் ஏ விட்டுட்டு இருக்கான். எங்களையும், எங்க காதலையும் வாழ விடு ஜெனி. பிளீஸ்.

ஜெனி: என்னை மன்னிச்சுருங்க. நான் இப்பிடி எல்லாம் பண்ணது கார்த்தி என்னை இன்சல்ட் பண்ணிடானு தான். மத்தபடி எந்த காரணமும் இல்லை. என்னை மன்னிசுருங்க. உங்க லவ் சக்ஸஸ் ஆகணும். ஆல் தி பெஸ்ட்.

கீர்த்தி: தாங்க்ஸ் ஜெனி.

No comments:

Post a Comment