Wednesday 30 May 2012

கவிஞன் ஆகலாம்

தமிழ் நண்பர்கள் தளத்தில் நடந்த சித்திரை மாத பதிவு போட்டியில் மூன்றாம் இடம் பெற்ற என் கவிதை

Tuesday 29 May 2012

பாட்டு பாட வா




இசைஞானி மீது இஷ்டமானால்
கண்ணதாசன் உடன் காதலானால்
பாலசுப்பிரமணியம் பார்த்து பரவசமானால்
(மைக்)மோகன் மேல் மோகமானால்
பட்சிகளும் பாட்டு பாடும்
கானகுயில்களும் கானா பாடும்
பஞ்சவர்ண கிளியே நீ பாடகி ஆக மாட்டாயா!!!

Friday 25 May 2012

வேண்டாம் மழலையே



பிஞ்சிலேயே இணையமா!!!
வேண்டாம் அரும்புகளே!!!
அமுதும் உண்டு
நஞ்சும் உண்டு
இணையத்தில்...
இனம் கண்டு உணர
இது வயதில்லை...
ஓடி விளையாடு பாப்பா
என்று தானே பாரதி சொன்னார்.
இணையத்தில் விளையாட 
கற்று கொடுத்தது யாரோ??
இணைய உலகை மறந்து
இவ்வுலகிற்கு வா!!
கற்க பல உண்டு
விளையாட பல உண்டு 
சாதிக்க பல உண்டு...
எழுந்து வாருங்கள் 
செல்லங்களே!!!

மழை மகள்


வெட்ட வெளியில்
கொட்டும் மழையில்
மழலை போல்
ஆடும் பெண்ணே!!!
மழை நின்றாலும்
என் மனதில்
நீ ஏற்படுத்திய
காதல் மழை
ஓயவில்லை...
காதல் மழையில்
நனைய
வருவாயா கண்ணே!!!!!!!!!!!

Thursday 24 May 2012

காதல் தேவதை





காதல் வரம் வேண்டி
இதய தொட்டில் கட்டிய
காதல் பக்தர்களுக்கு
வரம் அருள வந்த
காதல் தேவதையே!!

உண்மை காதலுக்கு மட்டும்
உன் அருளை பொழிந்து
காலம் முழுதும்
சகல சௌபாக்கியங்களை பெற்று
வாழ வாழ்த்துவாயாக!!!

அழகி நீ!!!





காந்த பார்வை கொண்டவளா நீ
சாந்த பார்வை கொண்டவளா நீ
முத்து முத்து பல் அழகியா நீ
நெஞ்சை அள்ளும் சொல் அழகியா நீ 
புன்னகையின் அரசியா நீ
நல்நகையின் இளவரசியா நீ 
நாணத்தில் மலரும் பூங்கொத்தா நீ 
வெட்கத்தில் சிவக்கும் பூச்செண்டா நீ 
பளிங்கு மேனி கொண்டவளா நீ
பரதம் ஆடும் மயிலா நீ 
பச்சை கிளியின் வண்ணமா நீ
இச்சை ஊட்டும் குயிலா நீ!!!!!