Wednesday, 30 May 2012
Tuesday, 29 May 2012
Friday, 25 May 2012
வேண்டாம் மழலையே
பிஞ்சிலேயே இணையமா!!!
வேண்டாம் அரும்புகளே!!!
அமுதும் உண்டு
நஞ்சும் உண்டு
இணையத்தில்...
இனம் கண்டு உணர
இது வயதில்லை...
ஓடி விளையாடு பாப்பா
என்று தானே பாரதி சொன்னார்.
இணையத்தில் விளையாட
கற்று கொடுத்தது யாரோ??
இணைய உலகை மறந்து
இவ்வுலகிற்கு வா!!
கற்க பல உண்டு
விளையாட பல உண்டு
சாதிக்க பல உண்டு...
எழுந்து வாருங்கள்
செல்லங்களே!!!
Thursday, 24 May 2012
அழகி நீ!!!
காந்த பார்வை கொண்டவளா நீ
சாந்த பார்வை கொண்டவளா நீ
முத்து முத்து பல் அழகியா நீ
நெஞ்சை அள்ளும் சொல் அழகியா நீ
புன்னகையின் அரசியா நீ
நல்நகையின் இளவரசியா நீ
நாணத்தில் மலரும் பூங்கொத்தா நீ
வெட்கத்தில் சிவக்கும் பூச்செண்டா நீ
பளிங்கு மேனி கொண்டவளா நீ
பரதம் ஆடும் மயிலா நீ
பச்சை கிளியின் வண்ணமா நீ
இச்சை ஊட்டும் குயிலா நீ!!!!!
Monday, 21 May 2012
Subscribe to:
Posts (Atom)






