Friday 1 June 2012

பூக்கள் பேசினால்

தமிழ் தோட்டம் தளத்தில் நடைபெற்ற நகைச்சுவை போட்டியில் முதல்
பரிசை பெற்ற என் நகைச்சுவை


சில நேரத்துல நாம பூவுக்கு வாய் இருந்தா அழுதுரும்னு சொல்லுவோம்ல. அது மாதிரி பூவுக்கு வாய் இருந்திருந்தா என்ன எல்லாம் பேசியிருக்கும்னு சின்னதா ஒரு கற்பனை

1. வீட்டில் வளர்க்கப்பட்ட பூச்செடிக்கு சில நாட்களாக தண்ணீர் ஊற்றவில்லை.
பூ: பக்கி!! அது மட்டும் ஆப்பிள் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸா அடைக்குது. எனக்கு பச்சை தண்ணியை கூட கண்ணுல காட்டமாட்டிக்குது. 

2. ஒருவன் முதன் முதலாக காதலை சொல்ல ரோஜா கொடுத்தான். அவன் காதலியோ அதை தூக்கி எறிந்தாள்.
பூ: உங்க சண்டைல என்னை ஏன் டி தூக்கி எறிஞ்ச?

3.பூங்காவில் காதலிக்காக காத்திருக்கும் காதலன் பூக்களை ஒவ்வொரு இதழாக பிரித்து போட்டுக் கொண்டிருக்கின்றான்.
பூ: ஏன் டா? உன் காதலி வரலைனா என்னை இப்பிடியா கொடுமைப்படுத்துவ?

4. போட்டியில் வெற்றி பெற்ற ஒருவன் தனக்கு போட்ட மாலையை கழட்டாமல் வீடு செல்கிறான்.
பூ: ஒத்துகிறேன். நீ ஜெயிச்சு ஜெயிச்சு மாலை வாங்கிட்டனு.

5. திருமணத்தில் மணப்பெண் பூக்களின் எடை தாங்காமல் அலுத்துக் கொள்கிறாள்.
பூ: என்னோட ஒரு தோட்டத்தையே அழிச்சு தலையில வச்சுக்கிட்டதுக்கு நான் தான் அலுத்துக்கணும்.

6. புதிதாக திருமணமானவன் தன் மனைவிக்கு பூ வாங்கிக் கொண்டு செல்கிறான். 
பூ: அதான் அது அதுக்கு ஆள் வேணும்றது. இத்தனை நாள் என்னை திரும்பி பார்த்திருப்பியா?

7. மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் பூ
பூ: என்னை ஏன் டா இப்பிடி குறுகுறுகுறுனு பாக்கிறீங்க? எனக்கு வெட்கமா இருக்கு.

8.நோயாளிக்கு கொடுக்கும் பூங்கொத்து. 
பூ: அவனே உடம்புக்கு முடியாம இருக்கான். ஆப்பிளோ, ஆரஞ்சோ வாங்கி கொடுத்தா ஜூஸ் போட்டுக் குடிப்பான். என்னை ஏன் டா கொடுக்கிறீங்க?

9. இறந்த வீட்டில் பிணத்தின் கழுத்தில் இருக்கும் மாலை
பூ: நீங்க எல்லாம் நாறாம இருக்க என்னை ஏன் டா இப்பிடி நாறடிக்கிறீங்க?

10. கடவுளுக்கு சமர்ப்பிக்கப்படும் மாலை
பூ: அப்பாடா!! எனக்கு சொர்க்கம் தான்.

2 comments:

  1. வெற்றி பெற்றமைக்கு பாராட்டுக்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete