Friday 23 March 2012

என் ஃப்ரெண்ட் ட போல யாரு மச்சான்



          அலுவலகம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. மணி 9.25. அப்பொழுது இருவர் நிதானமாக அலுவலகத்தில் நுழைகின்றனர். அவங்க தான் இந்த அலுவலகத்தோட மேலதிகாரி. அப்படி ஆகணும்னு நினைச்சு முதல் நாள் சேர வந்திருக்காங்க. இருவருக்குமே மற்றவர்களை கவரும் விதத்தில் பேசுறோம் என்ற நினைப்பு உண்டு. ஆனால் உண்மையில் அப்படி இல்லை. (அடிக்கடி மொக்கை வாங்குறதே வேலையா வச்சுருந்தாங்க). மேலதிகாரியை சந்திக்க சென்ற பொழுது தாமதத்திற்கான காரணத்தை கேட்கிறார். அதற்கு வெங்கட் “சரியான நேரதிற்க்கு வந்திருந்தா பத்தோட பதினொன்ன எங்களையும் நினைச்சு அப்பவே மறந்துருவீங்க ஸார். அதான் லேட்” னு மொக்கையா ஒரு காரணத்தை சொல்ல மேலதிகாரியோ சின்ன கண்டிப்புடன் சில கோப்புக்களை கொடுத்து அவர்களை அனுப்பி வைக்கிறார்.
           முதல் நாளே அவர்கள் வேலையை நன்றாகவே ஆரம்பித்தனர். வெங்கட் கல்லூரியை போலவே நினைத்து குறட்டையை விட, செந்தில் தன் கனவு உலகத்திற்க்கு சென்றான். அப்போ எனக்கு வயசு 3.. தட்டு தடுமாறி நடக்க, பேச ஆரம்பிச்ச காலம் அது. தாத்தா எனக்கு தினமும் கதை, நல்ல பழக்க வழக்கங்கள் எல்லாம் சொல்லி கொடுப்பார். தாத்தா தான் எனக்கு சேவற்கொடி செந்தில்நாதன் னு ஒரு மொக்கை பெயர் வச்சார். ஒரு நாள் “உனக்கு என்ன வேணுமோ அதை பிள்ளையார் கிட்ட கேளு. பிள்ளையார் செய்து கொடுப்பார்” னு சொன்னார். கண்ணால் பார்ப்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய் னு சாலமன் பாப்பையா சொல்லியிருக்கார் ல. அதாங்க நானும் அப்பவே பிள்ளையார் கிட்ட எனக்கு சாக்லேட் வேணும்னு வேண்டிக்கிட்டேன். அப்போ வீட்டுக்கு வந்த மாமா எனக்கு சாக்லேட் கொடுத்தார். நானும் ரொம்ப குஷியாகி தாத்தா சொன்னது நிஜம் தான் என்று நம்ப ஆரம்பித்தேன். அப்படியே செய்ய ஆரம்பிச்சேன். வீட்டு வாசல்ல தான் எப்பவும் விளையாடிட்டுருப்பேன். தனியா விளையாடி விளையாடி எனக்கு அப்பவே வாழ்க்கையே வெறுத்து போச்சுங்க. அப்போ தாத்தா சொன்னது ஞாபகம் வந்துச்சு. எனக்கு விளையாட ஒரு ஃப்ரெண்ட் கொடு கடவுளேனு வேண்டிக்கிட்டேன். அதுவும் நடந்துச்சுங்க.
        அடுத்த நாள் பக்கத்து வீட்டுக்கு புதுசா குடி வந்தாங்க. அந்த வீட்லயும் என்னை மாதிரியே ஒரு வால் பையன் இருந்தான். அவன் பேர் வெங்கட் ராமகிருஷ்ணன். அவனுக்கும் என் வயசு தான். நான் விளையாடிட்டு இருந்தப்ப அவனும் கூட சேந்து விளையாட ஆரம்பிச்சான். அப்போ ஆரம்பிச்சது தான் எங்க ஃபிரண்ட்ஷிப். அப்புறம் ஸ்கூல்க்கு போற வரை 2 பேரும் ஒண்ணா தான் விளையாடுவோம். எங்க ஃபிரண்ட்ஷிப் பார்த்து எங்க அப்பா, அம்மா எங்களை ஒரே ஸ்கூல் சேத்தாங்க. ஒண்ணா தான் சாப்பிடுவோம், விளையாடுவோம், ஸ்கூல்க்கு போவோம். டிவின்ஸ் கூட எங்களோட போட்டி போட முடியாதுங்க.
         நல்ல பழக்கமோ, கெட்ட பழக்கமோ ஒண்ணா தான் கத்துக்கிட்டோம். நாளுக்கு நாள் சேட்டை அதிகமாகி படிப்பு குறைஞ்சுருச்சு. ஸ்கூல் பாஸ் பண்ணுனதே பெரிய விஷயம் ஆயிருச்சு. இதுல 2 பேருக்கும் சாஃப்ட்வேர் இஞ்சீனியர் ஆகணும்னு வேற எய்ம். நாங்க வாங்குன மார்க் கு அது ஒண்ணு தான் கேடு. இருந்தாலும் நாங்க விடலையே. எங்க அப்பா அம்மா கிட்ட பேசி லஞ்சம் கொடுத்தாவது சேர முடிவு பண்ணிட்டோம். அவங்களும் ஒத்துக்கிட்டாங்க. ஆனால் ஒரு கண்டிஷன் போட்டாங்க உன்னால் அவன் கெட்டான், அவனால நீ கெட்ட. இனிமேலாவது உருபடுற வழிய பாருங்க.அதுனால 2 பேரும் வேற வேற காலேஜ்ல தான் சேரணும்னு சொல்லிட்டாங்க. நாங்களும் ஒரு கண்டிஷன் போட்டோம்.
வேற வேற காலேஜ் ல சேந்தா ஒரு நாள் 2 பேரும் என் காலேஜ்க்கு போவோம். ஒரு நாள் அவன் காலேஜ்க்கு போவோம்னு சொன்னோம். உருப்படவே மாட்டீங்கணு திட்டிட்டு 2 பேரையும் ஒரே காலேஜ் லே சேத்து விட்டாங்க. எங்களுக்கு முன்னாடியே தெரியுங்க. நாங்க ஒரே காலேஜ்ல தான் சேருவோம்னு. எப்படி னு கேக்கரிங்களா. நாங்க தான் பிள்ளையார்கிட்ட வேண்டிக்கிட்டோமே. எனக்கு மட்டும் இல்லைங்க வெங்கட்கும் இந்த நம்பிக்கை இப்போ வரை இருக்கு. எங்களுக்கு பிடிக்காத விஷயம். எங்க 2 பேரோட பெயர் தான். அதை வச்சு ஸ்கூல்ல ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க. அதுனாலயே காலேஜ் போனதும் வெங்கட்,செந்தில் னு சுருக்கமா சொல்லிக்கிட்டோம்.
           காலேஜ்க்கு போய் நிறைய புது ஃபிரண்ட்ஸ் கிடைச்சாங்க. ஆனாலும் வெங்கட்கும் எனக்கும் நடுவுல யாரும் வரமுடியல. நாளுக்கு நாள் எங்க ஃபிரண்ட்ஷிப் அதிகமாயிட்டே போச்சு. பிட் அடிச்சா கூட ஒண்ணா தான் பிட் அடிப்போம். ஒரு நாள் நான் பிட் அடிச்சு மாட்டிக்கிட்டேன். வெளிய போக சொல்லிட்டாங்க. வெங்கட் எழுந்து சாரி ஸார் னு சொன்னான். அவன் பிட் அடிச்சதுக்கு நீ ஏன் டா சாரி சொல்லுறனு கேட்டார். அது இல்லை ஸார், நான் அந்த பிட் பேப்பர பாஸ் பண்ணுனப்பா பாத்துடிங்களோனு நெனைச்சு சாரி சொல்லிட்டேன் ஸார். அப்போ நீங்க அத பாக்கலையா. சாரி ஸார் னு சொன்னான். 2 பேரும் வெளிய போங்கடானு சொல்லிட்டாரு. ஹய்யா. ஜாலி னு 2 பேரும் சினிமாக்கு போய்டோம். இப்படியே 7 செமெஸ்டர் முடிஞ்சதுங்க. எங்களோட அர்ரீயர் எண்ணிக்கையோ மட்டும் குறையலை. கடைசி செமெஸ்டர் ல ரொம்ப முயற்சி பண்ணி கொஞ்சம் அர்ரீயர் கிளியர் பண்ணினோம். வேலைக்கு போனாலும் ஒரே கம்பெனி தான்னு முடிவு பண்ணிட்டோம். இன்னைக்கு தான் எங்க கனவு நிறைவேருச்சு.
           கனவு கண்டு கொண்டிருந்தவனையும், உறக்கத்தில் இருந்தவனையும் ஒரு கை தட்டி(திட்டி) எழுப்பியது. அது அவர்களின் கண்காணிப்பாளர். கோப்புக்களை பார்க்கும்படி எச்சரித்து சென்றார். அப்பொழுது சிரிப்பு சத்தம் அவர்களின் கவனத்தை திருப்பியது. அந்த சத்ததிற்க்கு சொந்தக்காரி ஒரு அழகான பெண்.திரும்பி பார்த்த இருவர் மனதிலும் விளக்கு(பல்பு) எரிந்தது. கோவில் மணி அடித்தது.(தம் ண தம் ண தம்) என்ற ஒலி கேட்டது. கண்ணா லட்டு தின்ன ஆசையா... (செந்திலுக்கு கேட்கும் மைண்ட் வாய்ஸ்)... கண்ணா உனக்கும் அதே லட்டு தின்ன ஆசையா (வெங்கட்க்கு கேட்கும் மைண்ட் வாய்ஸ்).
           அன்று முதல் அந்த பெண்ணை கவர முயற்சித்தனர். அந்த பொண்ணு பேர் சொப்னா. “ரெண்டு பேரும் ட்ரை பண்ணுவோம். அந்த பொண்ணு யார லவ் பண்ணுதோ விட்டு கொடுத்துடுவோம் னு முடிவு பண்ணாங்க.இருவர் மனதிலும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தது. முதல் காரணம் அவர்களின் பெயர்கள். அவர்களின் முழு பெயர்களை மறைத்து சுருக்கமாக செந்தில், வெங்கட் என்றே வெளியில் சொல்லிக்கொண்டனர். இரண்டாவது காரணம் அர்ரீயர். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைத்தனர்.
          ஒரு நாள் அவள் தோழி அவளை சொப்னா சொப்னா என நீண்ட நேரமாக அழைத்தாள். அவள் வேலையில் கவனமாக இருந்ததால் கவனிக்கவில்லை. சொப்பணசுந்தரி என கத்தி அழைத்தாள். அப்போது தான் செந்தில் அதை கேட்டு சிரித்து விட்டு, வெங்கட்டிடம் அவள் பெயர் சொப்பணசுந்தரி னு சொல்லி 2 பேரும் சேர்ந்து சிரித்தனர்.பல நாட்கள் முயற்சி செய்தும் இருவரும் காதலை சொல்லவில்லை.
           6 மாதங்கள் கழிந்தது. அர்ரீயர் எக்ஸாம் எழுத இருவரும் 1 வாரம் விடுப்பு எடுத்தனர். 1 வாரம் கழித்து அலுவலகம் வந்து பார்த்த போது சொப்னாவும் விடுப்பு எடுத்து சென்றிருப்பது தெரிய வந்தது. இருவருக்கும் மனதிற்குள் சின்ன பயம் வந்து விட்டது. அவளுக்கு வீட்டில் திருமண ஏற்பாடு நடக்குமோ என்று யோசித்தனர். இருவரும் பிள்ளையாரிடம் சென்று வழக்கம் போல வேண்டிக்கொண்டனர்.
           “பிள்ளையார் அப்பா எப்படியாவது சொப்னாவை எங்களை லவ் பண்ண வை” னு 2 பேரும் வேண்டிடுருக்கும் போதே கடுப்பான கடவுள் அவர்கள் முன்னாடி தோன்றி “ஒரே ஸ்கூல் கேட்டீங்க, கொடுத்தேன். ஒரே காலேஜ் கேட்டீங்க கொடுத்தேன். ஒரே கம்பெனி ல வேலை கேட்டீங்க. அதையும் கொடுத்தேன். இப்போ ஒரே பொண்ணு வேணுமா? நான் டென்ஷன் ஆகுறதுக்குள்ள ஓடிடுடுங்கனு” அவங்களை கடவுள் விரட்டினார். இருந்தாலும் விடாமல் மீண்டும் மீண்டும் பிள்ளையாரை தொல்லை பண்ணினார்கள். பிள்ளையாரும் இவர்கள் தொல்லை தாங்காமல் உங்க மூன்று பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று கூறிவிட்டு மறைந்தார்.
           அதுக்கப்புறம் பல முறை 2 பேரும் ட்ரை பண்ணுனாங்க (லவ்வ சொல்றதுக்கு). பல நாட்கள் முயன்றும் காதலை அவர்களால் சொல்ல முடியவில்லை. அர்ரீயர் கிளியர் பண்ண அடுத்த செமெஸ்டர் ஒரு 1௦ நாள் விடுப்பு எடுத்தாங்க. இவங்க விடுப்பு எடுத்த அதே நாட்கள் சொப்னாவும் விடுப்பு எடுத்திருந்தாள். அப்போது தான் அந்த படு பயங்கரமான உண்மை அவர்களுக்கு தெரிந்தது. இவர்கள் படித்த அதே பொறியியல் கல்லூரியில் படித்தவள் தான் அந்த சொப்னா என்பது. ஆம் அவர்களின் சீனியர் தான் இந்த சொப்னா என்ற சொப்ன சுந்தரி. இவர்கள் விடுப்பு எடுக்கும் ஒவ்வொரு முறையும் சொப்னாவும் விடுப்பு எடுக்க காரணம், அவளும் அர்ரீயர் எழுத சென்று இருந்தாள்.
              6 மாதங்கள் கழித்து அவங்க நினைச்சபடியே அவங்க 3 பேருக்கும் கல்யாணம் நடந்துச்சு. அதிர்ச்சி ஆகாதீங்க. 3 பேருக்கும் தனித்தனியா கல்யாணம் நடந்துச்சு. இப்போது செந்தில் மகனும், வெங்கட் மகனும் ஒன்றாக விளையாடுகிறார்கள்!!!. அவர்களும் தங்களுக்கு வேண்டியதை பிள்ளையாரிடமே கேட்டு இம்சை செய்கிறார்கள். ஸ்குரோல் பண்ணாதீங்க. கதை முடிஞ்சு போச்சு. bye

No comments:

Post a Comment